குற்றம்

குஜராத் - கடத்தப்பட்ட ரூ. 2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Veeramani

குஜராத் கடற்கரை அருகே ஒரு படகிலிருந்து சுமார் 2000 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 800 கிலோ போதைபொருட்களை கடற்படையுடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ள‌‌‌‌னர்.

பெரிய சாக்குமூட்டைகளில் பாகிஸ்தானிலிருந்து எடுத்து வரப்பட்ட போதைப் பொருட்கள் குஜராத்தின் போர்பந்தர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுவரை கைப்பற்றப்பட்டதில் இதுவே மிக பெரிய பறிமுதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் மூழ்கிக்கொண்டிருந்த கப்பலிலிருந்து இந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.