குற்றம்

ரவுடி ஷங்கர் என்கவுண்ட்டர் வழக்கு: காவல் ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

webteam

சென்னையில் ரவுடி ஷங்கரை சுட்டுக்கொன்ற காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

அண்மையில் ரவுடி ஷங்கர் காவல்துறையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, இந்த என்கவுண்ட்டரில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் நடராஜன், கீழ்பாக்கம் உதவி ஆய்வாளர் ராஜா உட்பட 7 பேரும் வரும் 7-ஆம் தேதி அதாவது வரும் திங்கட கிழமை விசாரணைக்கு ஆஜாராகும்படி சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.