குற்றம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரேஷன் கடை ஊழியர் போக்சோவில் கைது

kaleelrahman

வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறில் பிளஸ் 1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரேஷன் கடை ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ரேஷன்கடை ஊழியரான செந்தில்குமார், அதே பகுதியில் தனது பெரியம்மா வீட்டில் தங்கி பிளஸ்1 படித்துவந்த 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.