குற்றம்

நாயை காரில் கட்டி இழுத்து சென்ற மருத்துவர்: பதைபதைக்கும் வீடியோ

JustinDurai

ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் தனது காரில் தெரு நாயை கட்டி இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயை கட்டி சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த நாய், காரின் பின்னாலேயே ஓடியுள்ளது. இதனை பைக்கில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அந்த காரை வழிமறித்து, நிறுத்தி நாயை அவிழ்த்து விட்டுள்ளனர். இதன்பின்பு காயத்துடன் இருந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர்.

ரஜ்னீஷ் கால்வா என்பவர் போலீசை உடனடியாக தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறினார். இதையடுத்து டாக் ஹோம் அறக்கட்டளை கொடுத்த புகாரின் பேரில் நாயை காரில் கட்டி இழுத்துச்சென்ற மருத்துவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ்  போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தனது வீட்டின் அருகே தெரு நாய் வசித்து வந்ததாகவும், அதனை அப்புறப்படுத்த முயற்சித்தாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.