குற்றம்

மதனிடம் ஒரு ஆடி கார்தான் இருந்தது; அது சொகுசு கார் அல்ல - மனைவி கிருத்திகா

Sinekadhara

மதனிடன் ஒரு ஆடிகார்தான் இருந்தது; அது சொகுசு கார் அல்ல என அவருடைய மனைவி கிருத்திகா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 

ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ‘’யூடியூப் சேனலில் 20 மணிநேரம் வேலைபார்த்தவர் மதன். அவர் வீடுகள், கார்கள் என்று சொத்துக்களை வாங்கி குவிக்கவில்லை. 10 ஆண்டுகளாக மதன் எந்த சொத்துக்களையும் வாங்கவில்லை. நாங்கள் சொந்த வீட்டில் வசிக்கவில்லை. ஒரே ஒரு ஆடி கார்தான் இருந்தது. அது சொகுசு கார் அல்ல" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், யூடியூப் வீடியோவில் இருப்பது என் குரல் இல்லை; அது எனது குரல்தான் என நிரூபிக்கத் தயாரா? என கேள்வி எழுப்பினார். மேலும் எந்த முகாந்திரமும் இல்லாமல் மதன்மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.