குற்றம்

‘காதலை மறக்க தியானம்’ - சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது

webteam

பூந்தமல்லி அருகே காதலை மறக்கடிப்பதாக கூறி தியானம் செய்வதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர்.

போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் சந்திரமவுலி(50). இவர் அந்த பகுதியில் உள்ள கோயில்களில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒருவரை காதலித்தேன். அந்த காதலை மறக்க தியானம் செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் சந்திரமவுலி என்னை தனி அறையில் அழைத்துச் சென்றார். அங்கு தியானம் செய்யும்போது அவர் என்னிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார். தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

அந்தப்புகாரின் பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கோயில் அர்ச்சகர் சந்திரமவுலியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.