குற்றம்

காஞ்சிபுரம்: வாகன சோதனையில் சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள்

webteam

பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்றை மடக்கிப் பிடித்த பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர் காரை சோதனையிட்டனர்.

அப்போது காரில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து பெருநகர் பகுதி சேர்ந்த லோகநாதன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்