குற்றம்

"சீர்காழி கொள்ளையர்கள் கழிவறையில் வழுக்கி விழுந்தனர்": காவல்துறை

webteam

சீர்காழியில் 2 பேரை கொலை செய்துவிட்டு 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் கழிவறையில் வழுக்கி விழுந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்காழியில், 2 பேரை கொன்று 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய 3 பேரை 4 மணிநேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். பிடிபட்டபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஒரு கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொள்ளையில் தொடர்புடைய 4 ஆவது குற்றவாளியும் சிக்கியுள்ளார்.

கைதான மூன்று பேரிடமும் போலீசார் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ரமேஷ், மணீஷ் என்ற இரண்டு பேரும் காவல்நிலையத்தில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்துள்ளனர்.

இதையறிந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.