குற்றம்

மாதவரம்: பட்டாக்கத்தியுடன் வசனம் பேசி வீடியோ வெளியிட்டவர் கைது

JustinDurai

சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த புகாரில், ஆதித்யா பூர்ணா என்கிற தம்பா என்ற நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அந்த நபர் பட்டாக்கத்தியுடன் வசனம் பேசி வீடியோ வெளியிட்டவர் என்பதும், அவர் மீது ஏற்கெனவே 3 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.