குற்றம்

பெரம்பலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் கைது

kaleelrahman

பெரம்பலூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 63 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் அருகே சித்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (63). இவர், அவரது உறவுக்கார 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய், மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் கோவிந்தராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.