குற்றம்

பெயிண்டிங் ஒப்பந்ததாரர் வெட்டிப்படுகொலை: 5 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

webteam

ஊரப்பாக்கம் அருகே பெயிண்டிங் ஒப்பந்ததாரரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த அண்ணாநகர், கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(33). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் நேற்று பெயிண்டிங் வேலைக்காக வண்டலூர் பகுதிக்கு சென்று இரவு சுமார் 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். ஊரப்பாக்கம் அடுத்த பிரதான சாலையில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது.

இதில் பார்த்திபன் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். பார்த்திபன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.