குற்றம்

கிருஷ்ணகிரி: கேலை ஆட்டை வேட்டையாடிய ஒருவர் கைது; ஒருவர் தப்பியோட்டம்

Sinekadhara

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வனத்துறை காப்புக்காட்டில் கேலை ஆட்டை வேட்டையாடிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காப்புக்காடு வனப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனக்காவலர்கள் காட்டில் ரோந்து சென்றபோது, சிங்காரப்பேட்டை காப்புக்காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த சாம்பசிவம்(45) மற்றும் சண்முகம்(55) என இருவர் பிடிபட்ட நிலையில் சண்முகம் கைது செய்யப்பட்டர். உடனிருந்த சாம்பசிவம் காப்புக் காட்டில் தப்பி ஓடிவிட்டார். தப்பியோடிய சாம்பசிவத்தை வனக்காவலர்கள் தேடி வருகின்றனர்.

கேலை ஆட்டை வேட்டையாட பயன்படுத்திய கம்பி, சுருள் கத்தி போன்றப் பொருட்களை கைப்பற்றிய வனத்துறையினர் வேட்டையாடிக் கொன்ற ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.