குற்றம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

Sinekadhara

அரியலூர் மாவட்டத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்ட முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவர் சுந்தரம். இந்த முதியவர் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்து நடத்திவருகிறார். அவரது கடைக்கு வந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி அந்தச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி சுந்தரத்தை தாக்கினர்.

இதனால் காயமடைந்த சுந்தரம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மீது, மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.