குற்றம்

சென்னை: கெட்டுப்போன பானிபூரி விற்பனை செய்ததாக வடமாநிலத்தவருக்கு அடி, உதை

Sinekadhara

சென்னை அம்பத்தூரில், கெட்டுப்போன பானிபூரி உருளை கிழங்கை விற்பனை செய்ததாகக் கூறி, வடமாநிலத்தைச் சேர்ந்தவரை பொதுமக்கள் கட்டிவைத்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பட்ரவாக்கம் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பானி பூரி விற்பனை செய்த நிலையில், அங்கு சீமான் வருகைக்காக காத்திருந்த நாம் தமிழர் கட்சியினர் வாங்கி உண்டனர். அப்போது, உருளைக்கிழங்கில் புழு இருந்த நிலையில், அப்பகுதி மக்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவரை கட்டிவைத்து உதைத்தனர். பின்னர் பானி பூரி தயாரிக்கும் இடத்துக்குச் சென்று, அதை தயாரித்தவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.