குற்றம்

சென்னையில் உடற்கல்வியியல் மாணவிக்கு பாலியல் தொல்லை! கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

webteam

சென்னையில் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கல்லூரி முதல்வர் மீது போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள உடற்கல்வியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், கல்லூரிக்கு அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் பயின்று வரும் உடற்பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், இக்கல்லூரியின் முதல்வர் வகுப்பில் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 3 மாதங்களாகவே முதல்வர் தனது செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் கல்லூரியின் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.