குற்றம்

நாமக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆலை மேற்பார்வையாளர் போக்சோவில் கைது

kaleelrahman

நாமக்கல் மாவட்டம் அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைக் கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக ஆலை மேற்பார்வையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆலையில் வேலை பார்க்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தைக் கூறி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் வெப்படை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வெப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மோகன்ராஜ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.