குற்றம்

சொகுசு காரில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - எம்எல்ஏ மகனுக்கு தொடர்பு?

JustinDurai

ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி ஒருவரை காருக்குள் வைத்து மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி ஒருவரை காருக்குள் வைத்து மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணையைத் தொடங்கிய ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலைய போலீசார், எம்.எல்.ஏ.வின் மகன் ஒருவர், ஒரு வாலிபர் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 376 (கூட்டுப் பாலியல் பலாத்காரம்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.  பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம்: பெட்ரோல் பங்க் வரை லிஃப்ட் கொடுங்க’ என நாடகமாடி கடத்தல் முயற்சி; 4 பேர் கைது