குற்றம்

4 வாகனங்களுக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள்

webteam

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சாலை அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களை மாவோயிஸ்டுகள் தீ வைத்து எரித்ததாக புகார் எழுந்துள்ளது. 

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஜி.மடகுள மண்டலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஜே.சி.பி வாகனங்களையும், அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாக்கப்பள்ளி அருகே 2 பொக்லைன் இயந்திரங்களையும் பெட்ரோல் ஊற்றி மாவோயிஸ்டுகள் எரித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆந்திரா - ஒடிசா எல்லை பகுதியில் இருமாநில போலீசாரும் இணைந்து நடத்திய என்கவுண்டரில் 20க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அப்பகுதி அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் மாவேயிஸ்டுகளின் செயல் அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.