குற்றம்

காதல் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு அழைத்து இளைஞர் கத்தியால் குத்திக்கொலை

webteam

கும்பகோணம் அருகே வண்ணக்குடி கிராமத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவைச் சேர்ந்த வண்ணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். கூலித் தொழிலாளியான இவரது மாமன் மகளை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை காதலித்த நபருக்கும் கல்யாணசுந்தரத்திற்கும் அடிக்கடி தகராறு நீடித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பெண்ணை காதலித்த நபர் நண்பருடன் சேர்ந்து இன்று காலை கல்யாணசுந்தரத்தை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கல்யாணசுந்தரம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் குறித்து திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.