குற்றம்

சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த நபர் கைது

கலிலுல்லா

சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக பதிவு செய்து வந்த நபரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் ஒரு சிறுமிக்கு தாயின் அனுமதியுடனே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருமாள் என்பவரின் பெட்டிக்கடையில் திடீரென சோதனை நடத்திய காவல்துறையினர் 30 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர் எங்கிருந்து குட்கா பொருட்களை வாங்குகிறார் என்பதை அறிய அவர் செல்ஃபோனை ஆய்வுக்கு கொடுக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தர மறுக்கவே சந்தேகமடைந்த அதிகாரிகள் செல்ஃபோனை வாங்கி சோதனையிட்டனர்.

அதில் வெவ்வேறு வயதுடைய 5 சிறுமிகளுக்கு பெருமாள் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ இருந்ததைக் கண்டு அதிர்ந்துபோய்விட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், பெருமாளுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், அதனால் தாயின் அனுமதியுடனேயே மகளையும் அவரின் வீட்டிற்கு வரும் சிறுமிகளையும் பாலியல் கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பெருமாள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரு பெண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.