குற்றம்

திருச்சியில் 17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த நபர் போக்ஸோவில் கைது

நிவேதா ஜெகராஜா

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 1 படிக்கும் மாணவியை கட்டாய திருமணம் செய்ததோடு, அவரை அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் 30 வயதான இளைஞரொருவர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த அந்த இளைஞர் மற்றும் அவரது தாய் தந்தையர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் சிறுமியை கட்டாயப்படுத்திய திருமணம் செய்த சிவசிதம்பரம் (வயது 30), மற்றும் அவரது தாயார் சந்திரா ஆகியோரை கைது செய்த விராலிமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள தந்தை மலைக்கண்ணுவை தேடி வருகின்றனர்.