குற்றம்

மகாராஷ்டிரா: ரயில் நிலையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

Veeramani

மகாராஷ்டிராவில் உள்ள உல்ஹாஸ்நகர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 14 வயது சிறுமி தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இரண்டு நண்பர்களுடன் ரயில் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் பாலத்தின் அடிவாரத்தில் நின்றுக்கொண்டு சிறுமியுடன் வந்த இரு நண்பர்களையும் சுத்தியலால் தாக்குவதாக பயமுறுத்திவிட்டு, சிறுமியை அருகிலுள்ள இருட்டு அறைக்குள் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு  அந்த நபர் சிறுமியை பாலியல் வன்முறை செய்ததுடன், கடுமையாக தாக்கியதாகவும் தெரிகிறது.   

கடுமையான சத்தத்துடன் அழுதுக்கொண்டிருந்த  அச்சிறுமியை போலீசார் மீட்டனர். அதன்பின்னர் அந்த நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.