குற்றம்

மதுரை: நடுரோட்டில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய இரு இளைஞர்கள் கைது

kaleelrahman

மதுரை அலங்காநல்லூர் அருகே நடுரோட்டில் பட்டாக் கத்தியால்; கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (19) பிரவீன்குமார் (21) என்ற இரு இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்து தனது நண்பர்களுடன் நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் அலங்காநல்லூர் போலீசார் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களை கைது செய்து அவர்களிடமிருந்த பட்டாகத்தி மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.