குற்றம்

செல்போன் கடையில் கொள்ளை: திருடர்களுக்கு வலைவீச்சு!

webteam

மதுரையில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற திருடர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே மாலிக் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் நேற்றிரவு வழக்கம் போல தனது கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். பின்னர் காலையில் கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது யாரோ கடையை கொல்லை அடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆராய்ந்தனர்.

இந்தக் கொள்ளையில், ரூ.15 ஆயிரம் ரோக்கம், 20 செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் என ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.