குற்றம்

சென்னை: சூப்பர் மார்கெட்டிற்குள் புகுந்த சொகுசு கார்; ஒருவர் படுகாயம்

Sinekadhara

சென்னை அண்ணா நகரில் இளைஞர்கள் சிலர் கார் ரேஸில் ஈடுபட்டபோது, சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த சொகுசு காரால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் ஒருவர் படுகாயமடைந்தார். நேற்று நள்ளிரவு சொகுசு கார்களுடன், இளைஞர்கள் சிலர் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கார் ஒன்று, சூப்பர் மார்கெட் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கடையின் ஊழியர் படுகாயமடைந்தார். இதனால் காரை ஓட்டி வந்த நபர், மற்றொரு காரில் தப்பிச் சென்றுள்ளார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக, அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவருடைய கார் என்றும், அந்த காரினை அவரது மகன் ராஜேஷ் என்பவர் ஓட்டிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. நண்பர்களோடு சேர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டபோது விபத்து நேரிட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.