குற்றம்

6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை - அதிரடி தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம்

webteam

6 மாத பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் நடந்த பொருட்காட்சியில் தங்கியிருந்த தம்பதியின் 6 மாத பச்சிளம் குழந்தையிடம், ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்றில் வழக்குப்பதிவு செய்து பாரதியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, ஐஸ் கடைக்காரர் பாரதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.