குற்றம்

கொடுங்கையூர் விசாரணை கைதி மரணம் - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Sinekadhara

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் என்பவரிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். ஐயத்திற்குரிய வகையில் உயிரிழந்த ராஜசேகர் தொடையில் காயம் இருந்ததாக விசாரணையில் தகவல் வெளியானது. இந்நிலையில் விசாரணை கைதி சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.