குற்றம்

இளம் பெண் மீது பெட்ரோல் உற்றி எரித்த கொடூர இளைஞன்

webteam

கேரளாவிலுள்ள திருவல்லா பகுதியில் இளம் பெண் ஒருவரை தீ வைத்து கொள்ள முயற்சி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள கும்பநாட் பகுதியைச் சேர்ந்தவர் அஜின் ரேஜி மேத்யூ(18). இவர் திருவல்லா பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணை வலியுறுத்தியுள்ளார். இதனை அந்தப் பெண் மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அந்தப் பெண் தான் பயிலும் கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அப்போது வழியில் அவரை சந்தித்த அஜின் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். இதை அப்பெண் மறுக்கவே அஜின் தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் அப் பெண்ணை மீட்டு அருகிலுள்ள திருவல்லா அரசு மருத்தவமனையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் தப்பி ஓட முயன்ற அஜினையும் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அஜின் மேத்யூ மீது 302-பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் 60% தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் அப்பெண் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.