ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குத்திக் கொலை pt desk
குற்றம்

கர்நாடகா | 5 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குத்திக் கொலை

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில், மனைவி, மகள், மாமனார், மாமியார் என சொந்த குடும்பத்தையே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் உள்ள பேகுரு கிராமத்தைச் சேர்ந்த கிரிஷ் என்பவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாகி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களது 5 வயது பெண் குழந்தை உட்பட 4 பேர் குத்திக் கொலைப்பட்டதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

Arrested

உடனே நிகழ்விடத்துக்குச் சென்று உடல்களைக் கைப்பற்றி கூராய்வுக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர், தனிக் குழு அமைத்து கிரிஷ்ஷை தேடிப் பிடித்து கைது செய்தனர். கொலைக்கான முழுமையான காரணம் விசாரணைக்குப் பின் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.