குற்றம்

காஞ்சிபுரம்: பெண் வளையல் வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டல் - அதிமுக பெண் நிர்வாகி கைது

kaleelrahman

காஞ்சிபுரத்தில் மாமூல் கேட்டு அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் வளையல் கடை நடத்தி வருபவர் சித்ரா. கணவனால் கைவிடப்பட்ட இவர் தனது கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வளையல் கடைக்கு வந்த அதிமுக மகளிர் அணி நகர இணைச் செயலாளர் திலகவதி, 50 ஆயிரம் ரூபாய் மாமுல் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், சித்ரா பணம் கொடுக்காததால், திலகவதி சித்ராவை தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் சிவ காஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிமுக நிர்வாகி திலகவதியை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.