கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட பிஜின்குட்டியின் சகோதரரான மோசஸ் என்பவரிடம் கோவையில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த 15ஆம் தேதி முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி இடம் கோவை காவலர் பயிற்சி மையத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர். அவரிடமும் அவரது குடும்பத்தினரும் அன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி, அதிமுக வர்த்தக அணி பொறுப்பாளர் சஜீவன், அவரது சகோதரர் சிபி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டியின் உதவியாளர் நாராயணசாமி ஆகியோரிடம் அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்ற இடம் மூன்று கட்டங்களாக கிட்டத்தட்ட இருபத்தி ஏழு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இவ்வாறான சூழலில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறாவது நபரான பிசினின் சகோதரர் மோசஸ் இடம் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசஸ் உடன் மேலும் இருவரும் வந்துள்ளனர் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சஜீவன் இன் சகோதரர் சிபியும் மோசஸ் நண்பர்கள் என சொல்லப்படுகிறது.
கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தபோது சோதனைச் சாவடிகளில் பிஜின் உள்ளிட்டோர் சிக்கியபோது மோசஸ் சி பி யுடன் பேசினாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே மோசஸ் இடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருந்த நிலையில் அடுத்த கட்டமாக முழுமையான விரிவான விசாரணைக்காக நின்று தனிப்படை காவல்துறையினர் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது