குற்றம்

மாமல்லபுரம்: மனைவியை கொலை செய்துவிட்டு பாம்பு கடித்ததாக நாடகமாடிய கணவர் கைது

JustinDurai
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிரிக்கெட் ஸ்டம்பால் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு பாம்பு கடித்ததாக நாடகம் ஆடிய கணவன் கைது செய்யப்பட்டார்.
பையனூரில் வசிக்கும் ரவிக்குமார், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து நாள்தோறும் மதுபோதையில் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டப்போது வீட்டில் இருந்த கிரிக்கெட் ஸ்டம்பால் மனைவியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் பாம்பு கடித்ததால் தனது மனைவி உயிரிழந்ததாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.
எனினும் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.