குற்றம்

ஓசூர்: மாட்டுத் தீவனத்தில மறைத்து கடத்திவரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல்; இருவர் கைது

kaleelrahman

ஒசூர் அருகே மாட்டுத்தீவனத்தில் மறைத்து கடத்திவரப்பட்ட சுமார் 1 டன் குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகா மாநிலம் சர்ஜாபுராவிலிருந்து தமிழகத்திற்கு குட்கா கடத்தப்படுவதாக பாகலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஒசூர் அடுத்த கக்கனூர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், பிக்அப் வாகனத்தில் மாட்டுத்தீவனத்தில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 5,80,500 ரூபாய் மதிப்பிலான சுமார் 1டன் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து சிவகங்கையைச் சேர்ந்த மூர்த்தி (24), வடமாநிலத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் புன்னாராம் (24) ஆகிய இருவரையும் கைது செய்து பிக் அப் வாகனத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.