குற்றம்

சென்னை: ஓட ஓட விரட்டி திமுக பிரமுகர் வெட்டி படுகொலை; போலீஸ் விசாரணை

Veeramani

சென்னை காந்திநகரில் திமுக பிரமுகரை ஒரு கும்பல் விரட்டிச்சென்று வெட்டி படுகொலை செய்துள்ளது.

சென்னை காந்திநகர் பல்லவன் சாலையில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் புறப்பட்டு சென்றப் பின்னர், அங்கிருந்த திமுக பிரமுகர் மதன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் விரட்டியுள்ளது. பின்னர் மதனை வெட்டிபடுகொலை செய்த அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொலைசெய்யப்பட்ட மதன் அண்மையில்தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது தெரியவந்தது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் திமுகவிற்காக பணியாற்றியிருக்கிறார்.

இந்தநிலையில், அவர் தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்றும் கொலையாளிகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.