விழுப்புரம் அருகே கொரோனா நிவாரண உதவி தொகை குறித்து ரஜினி - விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விஜய் ரசிகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ்[22]. கூலி தொழிலாளி. இவர் விஜய் ரசிகர் ஆவார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ஆறுமுகம், சமையல் தொழிலாளி. இவரது மகன் தினேஷ்பாபு[22]. இவர் ரஜினி ரசிகர் ஆவார். இவர்கள் இரண்டுபேரும் நண்பர்கள்.
(யுவராஜ்) - விஜய் ரசிகர்
இவர்கள் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். இந்நிலையில், குடிபோதையில் இருந்த இருவரும் கோரோனா தடுப்பு பணிக்கு நிவாரண நிதியாக அரசுக்கு அதிகம் பணம்கொடுத்தது, ரஜினியா? விஜயா? என்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
(தினேஷ் பாபு) - கொலை செய்தவர்
இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு யுவராஜியை கையால் பலமாக தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப்பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல்கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து யுவராஜியை அடித்துகொலை செய்த தினேஷ்பாபுவை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.