குற்றம்

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சூட்கேஸில் பெண் சடலம்

Sinekadhara

சேலத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் மறைத்துவைத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரசாமிப்பட்டியில் உள்ள குடியிருப்பில் மாற்றுதிறனாளியான தேஜ்மண்டல் என்ற பெண் சூட்கேஸ் ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் தொழில் நடத்தி பிடிபட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்ததாகவும், பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பழைய வழக்குகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.