குற்றம்

ஈரோடு: நகைக்காக பாட்டியை கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை, 15 ஆயிரம் அபராதம்

kaleelrahman

ஈரோட்டில் நகைக்கு ஆசைப்பட்டு பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெருமாள்மலையைச் சேர்ந்த மூதாட்டி கௌரியை கடந்த 2011ஆம் ஆண்டு 8.5 பவுன் தங்க நகைக்காக கொலை செய்த பேரன் கோபிநாத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மாலதி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.