குற்றம்

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி... தலைமறைவாக இருந்த நிலையில் கைது!

webteam

ஈரோடு அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுமி காணமால் போனதாக தொடரப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சிறுமியின் எதிர்வீட்டைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியதோடு சிறுமியை அழைத்துச்சென்று தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியை அவரிடமிருந்து மீட்ட போலீசார், தினேஷ் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.