குற்றம்

சட்டவிரோதமாக மணல் அள்ள துணைபோகும் திமுக எம்எல்ஏ? - வெளியான ஆடியோ! #VideoStory

webteam

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் `சட்டவிரோதமாக மணல் அள்ளுவது குறித்து புகார் அளிக்கக்கூடாது’ என்று திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், வழக்கறிஞர் ஒருவரிடம் செல்போனில் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி உள்ளது.

திருமண மண்டபம் கட்டுவதற்கு ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. மணல் திருட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் புகார் அளித்தவரை மணல் திருட்டில் தலையிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடர்பான அந்த ஆடியோ உரையாடல் இங்கே: