குற்றம்

தூத்துக்குடி: கோயில் திருவிழாவில் திமுக நிர்வாகி படுகொலை

PT WEB

தூத்துக்குடியில் கோயில் திருவிழாவில் திமுக நிர்வாகி கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

சண்முகபுரத்திலுள்ள முனியசாமி கோயில் திருவிழாவில், சிலர் மதுபோதையில் நடனமாடியுள்ளனர். மக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டதால், நடனத்தை நிறுத்துமாறு திமுக வட்டச் செயலாளர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்தவர்கள் நடராஜனை பின் தொடர்ந்து சென்று கத்தியால் குத்திப்படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், அருண்குமார், அஜித்குமார் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகவுள்ள மாரிமுத்து, அந்தோணிசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.