குற்றம்

திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறு: மனைவி வெட்டிக் கொலை - கணவர் கைது

kaleelrahman

கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவர் விஏஒ அலுவலகத்தில் சரணடைந்தார்.

திருப்பூரில் கள்ளக்காதலால் விபரீதத்தால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் சரண். காவல்துறையினர் விசாரனை.

குமார் - தனலட்சுமி தம்பதியர் கடந்த ஐந்து மாதங்களாக திருப்பூர் காலேஜ் ரோடு சலவைபட்டறை, ஜே.ஜே நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது சொந்த ஊரான தென்காசியில் இருந்தபோது, தனலட்சுமிக்கும் காட்டுராஜா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதையறிந்த குமார், தனலட்சுமியை கண்டித்துள்ளார். ஆனால், திருப்பூர் வந்த பிறகும், அந்த நபருடன் மொபைல் போனில் தனலட்சுமி பேசி வந்தார். இதையடுத்து இன்று அதிகாலை தம்பதியர் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் பிரச்னையால் ஆத்திரமடைந்த குமார் அரிவாளால் தனலட்சுமியின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

இதைத் தொடர்ந்து, வேலம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சரணடைந்த குமாரை, வேலம்பாளையம் போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.