குற்றம்

வீட்டில் பதுக்கப்பட்ட 450 கிலோ போதைபொருள் - சொகுசு கார், ஆட்டோ பறிமுதல்; இருவர் கைது

webteam
திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 460 கிலோ குட்கா, சொகுசு கார், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து எஸ்பி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 
திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் பாலாண்டி, சார்பு ஆய்வாளர்கள் மலைச்சாமி, விஜய் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் வாழைக்காய் பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கை தென்பட்டதால் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில் அந்த வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் குட்கா பதுக்கி வைத்திருந்த முகமது இஸ்மாயில்(32), தெளபிக் ராஜா(28) ஆகிய இரண்டு பேரை கைது செய்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 460 கிலோ குட்கா, சொகுசு கார் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.