குற்றம்

காதல் விவகாரம்: மகளின் தலையை துண்டித்து காவல்நிலையத்திற்கு எடுத்துவந்த தந்தை

webteam

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதல் விவகாரத்தில் தனது மகளின் தலையை துண்டித்து காவல்நிலையத்திற்கு எடுத்து வந்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரபிரதேச மாநிலம் பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ்குமார். காய்கறி வியாபாரம் செய்து வந்த இவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், நேற்று சர்வேஷின் மூத்தமகள் தனது காதலனை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த போது, அதை சர்வேஷ் பார்த்ததாக தெரிகிறது. அது சர்வேஷிற்கு பிடிக்காததால், அவர் நேற்று மதியம் 3 மணியளவில், மகளின் தலையை வெட்டி கிட்டத்தட்ட 2 கிமீ வரை துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்நிலையத்தை அடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனை தொடர்ந்து காவலர் ஒருவர் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்நிலையத்தில் உலா வந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலானது. அதனைத்தொடர்ந்து அவரின் மீது நடவடிக்கை எடுத்த ஐ.ஜி லக்‌ஷுமி சிங் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.