பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான் தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாள் போலீஸ் காவல் விடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சி முடிந்தபிறகு வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக கொடுக்கப்பட்ட புகாரில் மே 28ஆம் தேதி நாகராஜன் கைது செய்யப்பட்டு ஜூன் 11ஆம் தேதிவரை அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சென்னை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.