குற்றம்

தலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி!

webteam

உத்திரபிரதேச மாநிலத்தில் தலையில்லாமல் 14 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த பெண்ணின் உடல் வெட்டப்பட்ட நிலையில் எட்டவா என்ற மாவட்டத்தில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இந்த கொலை தொடர்பாக சர்வேஷ் யாதவ்(40) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் ஒரு மனநோயாளி. மேலும் நான்கு பெண்கள் படுகொலையில் இவருக்கு தொடர்பு உண்டு. இவருக்கு உதவியாக இருந்த அவரது மாமாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சர்வேஷ் ஒரு இளம்பெண்ணை முதன் முதலில் கொலை செய்துள்ளார். கடைசியாக செப்டம்பர் 20 ஆம் தேதி 38 வயதில் புதி தேவி என்ற பெண்ணை சர்வேஷ் யாதவ் கொலை செய்துள்ளார். புதி தேவியின் கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சர்வேஷ் அவரது மாமாவை திருமணம் செய்து கொள்ளுமாறு புதி தேவியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு புதி தேவி மறுப்பு தெரிவிக்கவே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் அவர் உடலை நறுக்கி, ஆதாரங்களை மறைக்க ஒரு வயலில் புதைத்துள்ளார்” எனத் தெரிவிக்கின்றனர்.