குற்றம்

காந்தி குறித்து சர்ச்சையான கருத்து: காளிசரண் மகாராஜ் கைது

Veeramani

தேசத்தந்தை மகாத்மா காந்தியை மோசமாக விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், காளிச்சரண் மகாராஜ் என்ற சாமியாரை சத்தீஸ்கர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற தர்ம சன்சாத் என்ற மதக் கூட்டத்தில் பேசிய மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த காளிச்சரண் மகாராஜ்,  மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ராய்ப்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் கஜூராஹோ-வில் பதுங்கியிருந்த காளிசரண் மகாராஜை, சத்தீஸ்கர் காவல்துறையினர் கைது செய்து, ராய்ப்பூர் அழைத்துச் சென்றனர்.