குற்றம்

காங்கிரஸ் கட்சி பிரமுகரை வெட்டிக் கொலை செய்த கும்பல்

Sinekadhara

சென்னை ஆதம்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடியை மற்றொரு ரவுடி கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தென் சென்னை மாவட்ட துணைத்தலைவராக நாகூர் மீரான் என்பவர் இருந்துள்ளார். இவர், தனது பெண் தோழிகளை பார்க்கச் சென்ற போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது. இதையடுத்து கொலை செய்த ஐந்து பேர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். யார் பெரிய ரவுடி என்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.