குற்றம்

நகைத்தரம் குறைவாக இருந்ததாகப் புகார் - கடைக்குள் புகுந்து தாக்குதல் - சிசிடிவி காட்சி

webteam

தஞ்சாவூரில் நகைக்கடை ஒன்றுக்குள் புகுந்து வாடிக்கையாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தசம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே காந்திஜி சாலை முக்கிய வீதியில், கமல்சந்த் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் நகை வாங்கியதில் தரம் குறைவாக இருந்ததாகக் கூறி, வாடிக்கையாளர் தனது உறவினர்களுடன் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், 2 பேரை காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்தனர்.