தாம்பரம் அருகே கல்லூரி மாணவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ராம்ஜிநகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் அருள். இவரது மகன் அபிஷேக் என்கிற பாபு(20). இவர் சென்னை பல்லாவரம் வேல்ஸ் காலேஜில் பி ஏ எக்கனாமிக்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், அபிஷேக் நேற்று சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்காஸ் கிராமத்தில் விண்ணேற்பு மாதா ஆலய கலையரங்கத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது 5 கொண்ட மர்ம கும்பல் அபிஷேக்கை வழிமறித்து சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
தகவலறிந்து வந்த சோமங்கலம் காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அபிஷேக் அண்ணன் ஜோசப் ராஜ் என்பவர் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் சிறை கைதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.