குற்றம்

ராணிப்பேட்டை: வெல்டிங் மூலம் ஏ.டி.எம்.-ஐ உடைத்து பணம் கொள்ளை

நிவேதா ஜெகராஜா

ராணிப்பேட்டை பெருங்களத்தூர் ஜி.ஆர்.டி. கல்லூரியில் ஏ.டி.எம்.-ஐ வெல்டிங் மூலம் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். இயந்தரமான அதில், கடந்த 15ம் தேதிதான் ரூ.8.50 லட்சம் நிரப்பட்டிருந்திருக்கிறது. கல்லூரிக்குள் இருந்த அந்த ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, அரக்கோணம் காவல்துறையினர் கொள்ளையர்களை தேடிவருகின்றனர். மேலும் தற்போது எவ்வளவு பணம் கொள்ளையப்பட்டிருக்கிறது என்பது பற்றியும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.